"அம்பேத்கர் எதிராக இருந்தார்" - மேடையில் போட்டு உடைத்த மோடி

x

மக்களவைத் தேர்தலையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் டிண்டோரியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், மக்களுக்கு சேவையாற்றுவதே தனது வாழ்வின் மிகப்பெரிய நோக்கம் என்று கூறினார். அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது பால் தாக்கரேவின் கனவு என்றும், அவருடைய ஒவ்வொரு கனவையும் போலி சிவசேனா சிதைத்து விட்டதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அம்பேத்கர் எதிராக இருந்ததாக குறிப்பிட்ட பிரதமர், பட்டியலினத்தவர் தவிர, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் இட ஒதுக்கீட்டை பறித்து காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கிக்கு வழங்க முற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடை வழங்குவதையும், பட்ஜெட் ஒதுக்கீடு செய்வதையும் தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று தெரிவித்த பிரதமர் மோடி, ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைகளின் பாதுகாவலனாக தாம் திகழ்வதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்