சிறப்பாக நடந்து முடிந்த பட்டமளிப்பு விழா.. ஆளுநர் முதல் அமைச்சர் வரை பங்கேற்பு

x

சிறப்பாக நடந்து முடிந்த பட்டமளிப்பு விழா.. ஆளுநர் முதல் அமைச்சர் வரை பங்கேற்பு


86வது பட்டமளிப்பு விழா சாஸ்திரி அரங்கத்தில் நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட முதன்மை ஆலோசகர் சவுமியா சுவாமிநாதன் பங்கேற்றனர். PHD பட்டம் பெற்ற 697 மாணவர்கள், உட்பட 789 பேருக்கு ஆளுநர் நேரடியாக பட்டங்களை வழங்கி கவுரவித்தார். ஒட்டுமொத்தமாக 36,382 மாணவர்கள் பட்டம் பெற ஒப்புதல் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய சவுமியா சுவாமிநாதன், சுகாதாரம், கல்வி, விவசாயம், அறிவியல் துறைகளில் செயற்கை நுண்ணறிவு புரட்சியை ஏற்படுத்துவதாகவும், அதற்கு நெறிமுறைகளை வகுத்து, பொறுப்பாக பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்