மெரினாவில் மாயமான மாணவன்... கதறி அழுத தாய் - கண் கலங்க வைக்கும் காட்சி

x

சென்னை தேனாம்பேட்டையைச் ​சேர்ந்த 17 வயது சிறுவன் மேகப்பிரியன், தனது நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்றார். வாலிபால் விளையாடிவிட்டு கடலில் ஐந்து பேரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென வந்த பெரிய அலையில் சிக்கி மேகப்பிரியன் இழுத்துச் செல்லப்பட்டார். அவரை மீட்கும் முயற்சி தோல்வி அடைந்ததால், நண்பர்கள் மெரினா மீட்பு படைக்கு தகவல் அளித்தனர். எவ்வளவு தேடியும் மாணவனை கண்டுபிடிக்கமுடியவில்லை. மகன் மாயமானதால், அவரின் தாய் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் அனைவரையும் கலங்க வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்