பிரபல மருத்துவமனை உள்ளேயே கொல்லப்பட்ட மூதாட்டி - சிக்கிய கருப்பு ஆடு - மதுரையில் அதிர்ச்சி

x

மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் மூதாட்டி முத்துலட்சுமி. இவர், கடந்த 12 ஆம் தேதி மர்மமான முறையில் மருத்துவமனைக்குள் வைத்தே கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், சுமார் 70க்கும் மேற்பட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உள்ள உணவகத்தில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்த மானாமதுரையை சேர்ந்த அழகர்சாமி என்பவரை போலீசார் கொலையாளியாக கைது செய்திருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன் மூதாட்டியிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை அழகர்சாமி கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நீண்ட நாள்களானதால்... கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டு தொடர்ந்து வலியுறுத்தி வந்த மூதாட்டியை மருத்துவமனைக்குள் வைத்தே அழகர்சாமி கொன்றது தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து மூதாட்டி அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்றதும், மறுநாளே எதுவும் நடக்காதது போல் அழகர்சாமி வேலைக்கு வந்ததும் தெரியவர, அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்