காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்த இளைஞர் - உயர்நீதிமன்றம் போட்ட முக்கிய உத்தரவு

x

மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த கமலாதேவி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், மதிச்சியம் போலீசார் விசாரணையின்போது தாக்கியதால் தனது கணவர் கார்த்திக் உயிரிழந்துவிட்டதாகவும், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு அவசர கால வழக்காக நீதிபதி வடமலை முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரை மாவட்டத்தில் கைது செய்யப்படும் நபர்கள் கொடூர குற்ற விசாரணை பிரிவில் சித்திரவதை செய்யப்படுவதாக குற்றம்சாட்டினார். அரசு தரப்பில், விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, 1 வாரத்திற்குள் வழக்கு விசாரணை தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்