`குளு குளுனு ஒரு குளியல்' - குற்றாலத்தில் குதூகலிக்கும் சுற்றுலா பயணிகள்

x

தென்காசி மாவட்டம் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் தற்போது சீசன் களைகட்டி உள்ளது. குறிப்பாக மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து சீராக இருப்பதால் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். மெயின் அருவியில் ஏராளமானோர் குவிந்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து வருகின்றனர். மேலும், வெயிலின்றி இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் சீசனை உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்