சுற்றுலா பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி - குற்றாலத்தில் புதிய தொடக்கம்

x

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக இருப்பதால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். தற்போது சீசன் காலம் என்பதால், மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம், சிற்றருவி போன்ற அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து சீராக வந்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது சாரல் மழையுடன் இதமான வெயில் நிலவி வருகிறது. இந்நிலையில், வார இறுதி நாட்களை முன்னிட்டு, குற்றால மெயின் அருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. காலை முதலே சுற்றுலா பயணிகள் உற்சாக குளியலில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்