அனுமதியின்றி வாகன பேரணி... ஷோரூமுக்குள் புகுந்து அராஜகம் - காரைக்காலில் பரபரப்பு

x

பொது வேலை நிறுத்தம் காரணமாக காரைக்காலில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டதால் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனிடையே முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் இந்திய கூட்டணி கட்சியினர் இரு சக்கர வாகன பேரணி சென்றனர்.

அப்போது அவர்கள் சாலையில் சென்ற பேருந்துகளை மறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நேரு வீதியில் திறந்திருந்த புதிய இருசக்கர வாகன ஷோரூக்குள் புகுந்த அவர்கள் அதனை மூடக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்