"கள்ளக்குறிச்சி சம்பவம் மரணம் அல்ல.. கொலை" - பாஜக முக்கிய பிரமுகர் கேள்வி

x

பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டின் கருணாபுரத்தில் பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் கிராமத்தில் நடந்த சோக சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது என்றும், கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் தலைவர்கள் இந்த விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். கள்ளக்குறிச்சி சம்பவம் மரணம் அல்ல.. கொலை என கடுமையாக விமர்சித்துள்ள அவர், சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவரின் வீட்டில் திமுக ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்ததாகவும் குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்