கொலை வழக்கில் ஷாக் திருப்பம் - சீனில் 3ம் நபர்.. மெயின் வில்லன் - மிரண்டுபோன போலீஸ்

x

கடலூர் அருகே காராமணி குப்பத்தை சேர்ந்த கமலேஷ்வரி, அவரது மகன் சுகந்த்குமார், பேரன் நிஷாந்த் ஆகியோர் வீட்டிற்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சங்கர் ஆனந்த், சாகுல் ஹமீது ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், தனது தாயாருக்கும், சுகந்த் குமாருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக பலர் கூறி வந்த நிலையில், தனது சகோதரர் திட்டியதால் தாயார் இறந்ததாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த நிலையில், சுகந்த்குமாரின் தாயார் கம்லேஷ்வரி தன்னை ஆதரவற்றவன் எனக்கூறி திட்டியதால் கோபத்தில் கொலை செய்ததாக சங்கர் ஆனந்த் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து கொலைக்கு சதி திட்டம் தீட்டியதாக 21 வயது பக்கிம் அகமதுவை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்