வரும் 25ம் தேதி முதல்.. இண்டிகோ விமான நிறுவனம் பரபரப்பு அறிவிப்பு

x

வரும் 25ம் தேதி முதல்.. இண்டிகோ விமான நிறுவனம் பரபரப்பு அறிவிப்பு

திருச்சி - அபுதாபி இடையில் வாரம், 4 நாட்கள் இயக்கப்பட்டு வந்த விமான சேவைகள் அனைத்தும், வரும் அக்டோபர் 25ம் தேதி முதல் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக, இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. துபாய் மற்றும் சார்ஜா பயணச்சீட்டுகளை ஒப்பிடும்போது, அபுதாபிக்கான கட்டணம் சற்று அதிகமாக உள்ளது. எனவே, அபுதாபி செல்லும் பயணிகளில் பெரும்பாலானோர் துபாய், அல்லது சார்ஜாவுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்து, அங்கு செல்கின்றனர். அங்கிருந்து சாலை மார்க்கமாக அபுதாபி செல்கின்றனர். இதன் காரணமாக நேரடியாக அபுதாபி செல்லும் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்