அஸ்பிடலுக்கு வந்த மர்ம பார்சல் - திறந்தவுடன் அதிர்ந்த நிர்வாகிகள்

x

சென்னையில் தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

பெரும்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு, கொரியர் மூலம் ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருந்தது. நண்பகல் சரியாக 12.15க்கு வெடிகுண்டு வெடிக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கடைசியில் வெடிகுண்டு மிரட்டல் போலி என தெரியவந்தது. போலியாக மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வெடிகுண்டு மிரட்டலால், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பெரும் அவதி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்