நாளுக்கு நாள் வெறி கொண்ட வேங்கையாக மாறும் ஒகேனக்கல்

x

நாளுக்கு நாள் வெறி கொண்ட வேங்கையாக மாறும் ஒகேனக்கல்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பிலிகுண்டு பகுதிக்கு வருகின்ற நீரின் அளவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி, 32,000 கன அடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது. தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதன் எதிரொலியாக, நீர்வரத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தொடர்ந்து, 11 வது நாளாக நீர்வீழ்ச்சிகளில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்