குழந்தைக்காக வாங்கிய காம்ப்ளானில் - கிடந்த பல்லி - பெற்றோர்களே உஷார்

x

என்.முக்குளம் கிராமத்தை சேர்ந்த தம்பதியர் ஜெயக்குமார் - சீதா. இவர்களுக்கு ஒரு வயது பூர்த்தி ஆகாத குழந்தை உள்ளது. நரிக்குடி பகுதியில் உள்ள தனியார் மெடிக்கல் ஒன்றில் குழந்தைக்காக காம்ப்ளான் பாக்கெட் ஒன்றை தந்தை ஜெயக்குமார் வாங்கியுள்ளார். குழந்தைக்கு தினமும் பாலில் கலந்து காம்ப்ளான் வழங்கப்பட்ட நிலையில், காம்ப்ளான் பாக்கெட்டிற்குள் எலும்புக்கூடாக பல்லியின் உடற்பாகங்கள் கிடந்துள்ளன. இதைப் பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காம்ப்ளான் பாக்கெட்டை வாங்கிய மெடிக்கல் கடையில் ஜெயக்குமார் முறையிட்டபோது கடையின் உரிமையாளர் முறையாக பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக குழந்தையின் பெற்றோர் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்