முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் மாயமான 100 பவுன் நகைஇறுதியில் காத்திருந்த ட்விஸ்ட் கைதான ஓனர்

x

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கொத்தக்குப்பம் கிராமத்தில் உள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விஜயலு, வீட்டில் கடந்த 27-ம் தேதி 100 சவரன் நகைகள், 70 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, ஆர்கே பேட்டை கிராமத்தில் உள்ள வாசு என்பவரின் நகைக் கடையில் பணியாற்றும் சுபா என்ற பெண் மூலம், 4 பேர் திருட்டு நகைகளை விற்பனை செய்ய முயன்றுள்ளனர். அதனை, மிகவும் குறைவான விலைக்கு வாங்க வாசு முன்வந்ததாக தெரிகிறது. இதுகுறித்த தகவல் கிடைத்த நிலையில், விரைந்து வந்த போலீசார், ஆர்கே பேட்டையைச் சேர்ந்த பூபதி, வேணு, சிரஞ்சீவி, ஆந்திராவைச் சேர்ந்த தினேஷ் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் கொள்ளையடித்த நகைகளை வாசுவிடம் விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, வாசுவையும், பெண் ஊழியர் சுபாவை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 35 சவரன் நகைகள், 8 புள்ளி 85 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்