நடுக்கடலில் விரித்த வலையில் சிக்கிய 200 டன் பொக்கிஷம்... மகிழ்ச்சியில் பூரித்த மீனவர்கள்

x

கடலூர் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலையில் 200 டன் அளவிற்கு பெரும்பாறை மீன்கள் கிடைத்தது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் அந்த மீன்களை கரைக்கு கொண்டு வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய பைபர் படகுகள் நடுக்கடலுக்கு வர வழைக்கப்பட்டு அதன் மூலம் கரைக்கு மீன்கள் கொண்டுவரப்படுகின்றன. மீன் வரத்து அதிகரித்துள்ளதால் சாதாரண நாட்களில் கிலோ 400 ரூபாய் வரை விற்கப்படும் பெரும்பாறை மீன்கள் நூறு ரூபாயாக குறைந்துள்ளதால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்