பட்ட பகலில் கேட்ட அலறல் சத்தம்- கத்தி முனையில் இருந்த 2 உயிர் -மர்ம நபர்கள் செய்த பகீர் காரியம்

x

அர்த்தநாரிபாளையத்தை சேர்ந்த விஸ்வநாதனின் மகன் கோகுலகிருஷ்ணனுக்கு திருமணம் நிச்சயமான நிலையில், பத்திரிகையை கோயிலில் வைக்க அவரது மனைவி சென்றுள்ளார். வீட்டில் விஸ்வநாதன் மற்றும் அவரது மகள் ரம்யா மட்டும் இருந்தனர். அப்போது, முகமூடி அணிந்து வீட்டிற்குள் புகுந்த 3 பேர், கத்திமுனையில் இருவரையும் மிரட்டி நாற்காலியில் அமர வைத்து கட்டி போட்டனர். பின்னர், பீரோவில் இருந்த ஐந்து லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். ரம்யாவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வந்து இருவரின் கட்டுக்களை அவிழ்த்து மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடயங்கள் மற்றும் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்