3நாட்கள் போராடிய மக்கள்... போராட்டத்தில் இறங்கினர்

x

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள

சோனலூர் கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக சரிவர

மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள், அடிக்கடி

போராட்டத்தில் ஈடுபடுவது தொடர் கதையாக உள்ளது.

குறைந்த மின்னழுத்தம் காரணமாக டிரான்ஸ்ஃபார்மர்

வெடித்ததில் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாமல்

அப்பகுதி பொதுமக்கள் தவித்து வந்த நிலையில், சோனலூர்,

போளச்சேரி சாலையை மறித்து சாலை மறியலில் ஈடுபட

முயன்றனர். தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு

சென்று பொதுமக்களை தடுத்து நிறுத்தி, மின்சாரத்துறை

அதிகாரிகளை வரவைத்து பேச்சுவார்த்தை நடத்தியதன்

பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்