தவெக மாநாடு இடத்தில் திடீர் ஆய்வு... டிஎஸ்பி சொன்ன முக்கிய தகவல்

x

தவெக மாநாடு இடத்தில் திடீர் ஆய்வு... டிஎஸ்பி சொன்ன முக்கிய தகவல்

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடைபெறும் பகுதியில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் 3 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்கு பிறகு பொதுச்செயலாளர் ஆனந்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரவாண்டி டிஎஸ்பி நந்தகுமார், மாநாடு நடக்கும் இடத்தில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். கழிவறைகள் மற்றும் பார்க்கிங் வசதிகள் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமாகவே ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்