ஆசையாக வளர்த்த நாய் அரக்கனாக மாறிய கொடூரம்... திருப்பத்தூரில் நடந்த பயங்கரம்

x

அத்திமாகுலப்பள்ளி பகுதியில் ஆறுமுகம் என்பவர், தனது வீட்டில் வளர்த்து வந்த வளர்ப்பு நாய் கடந்த இரண்டு நாட்களாக வெறி பிடித்து ஆடு மாடுகளை கடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், அதே பகுதியை சேர்ந்த அருள் - தேவகி தம்பதியின் இரண்டரை வயது குழந்தை தர்ஷன் விளையாடிக் கொண்டிருந்த போது, வெறி நாய் கடித்து குதறியதில் படுகாயமடைந்தான். வலியில் தர்ஷன் துடிதுடித்த நிலையில், உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். தெருவில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்