அதிகாலையிலே ஒரு காட்டு காட்டிய மழை- "வேலைக்கு போயிட்டு வீடு திரும்ப முடியல" - குமுறும் மக்கள்

x

கனமழை காரணமாக கொம்புகாரபாளையம் கிராமத்தில் உள்ள திருமணிமுத்தாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றில் இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் வேகமாக ஓடியதால், பெண்கள், குழந்தைகள், பணிக்கு செல்பவர்கள் கயிறு கட்டி ஆபத்தமான முறையில் ஆற்றை கடந்து செல்கின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். ஒவ்வொரு மழைக்கும் இதேபோல் மிகவும் சிரமத்தை அனுபவிப்பதாக வேதனை தெரிவித்த கொம்புகாரபாளையம் கிராமமக்கள், திருமணிமுத்தாறு ஆற்றின் குறுக்கே சிறுபாலம் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்