தகாத உறவில் இருந்த மாமியார் போட்ட ஸ்கெட்ச் - மருமகனை கொன்று கிணற்றில் வீசிய கொடூரம் - விசாரணையில்

x

பல்லடம் அருகேயுள்ள எஸ்.வேலாயுதம் பாளையத்தை சேர்ந்த வடிவேல், கோவில்பாளையத்தை சேர்ந்த திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், 8 மாதங்களுக்கு முன்பு திடீரென காணவில்லை எனக்கூறி உறவினர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர். விசாரணையில் வடிவேல் குறித்து எந்த ஒரு துப்பும் கிடைக்காததால் குழப்பமடைந்த போலீசார், இறுதியாக அவரின் மனைவி வீட்டாரை பிடித்து விசாரித்த போது அதிர்ச்சி காத்திருந்தது. வடிவேலுவின் மாமியாரான மரியாள், அதே பகுதியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்த பாலாஜி என்பவருடன் தகாத உறவில் இருந்து வந்ததும், மருமகனுக்கு சொந்தமான நிலம் ஒன்றை விற்று 7 லட்சம் ரூபாய் மோசடி செய்திருந்ததும் தெரியவந்தது. பணத்தை திருப்பி கேட்டு வடிவேல் அடிக்கடி தகராறு செய்ததால், மருமகனை தீர்த்து கட்ட மரியாள் திட்டம் தீட்டியிருக்கிறார். இதில், அடிக்கடி மதுபோதையில் வந்து அடித்து துன்புறுத்தியதால் ஆத்திரத்தில் இருந்த வடிவேலின் மனைவியும் அவரின் தாயாருடன் கூட்டு சேர்ந்தது அம்பலமானது. இந்நிலையில், தன் தகாத உறவு காதலன் மற்றும் கணவருடன் சேர்ந்து வடிவேலுவை அவரது மாமியார் கொன்று கிணற்றில் வீசியது அம்பலமானது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவத்தில், வடிவேலுவின் மனைவி, மாமியார் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்