சிறுவன் செய்த அதிர்ச்சி செயல் - துணை போன மருத்துவர்கள் - துடிதுடித்து உயிரிழந்த தம்பதி

x

புனேவில் கடந்த வாரம் போர்ஷே காரை மது போதையில் ஓட்டிய 17வயது சிறுவன், சாலையில் சென்ற பைக் மீது அதிவேகமாக மோதியதில், பைக்கில் பயணித்த தம்பதியினர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 வயது சிறுவன் குடிபோதையில் இருந்ததை உறுதி செய்ய, விபத்து நடந்த சில மணி நேரத்திலேயே இரண்டு வெவ்வேறு இடங்களில் அவரிடம் ரத்த மாதிரிகளை புனே நகர் காவல் துறையினர் சேகரித்தனர். புனே காவல் துறையினர் முதல் அறிக்கையில் குளறுபடி ஏற்பட்டால் இரண்டாவது மாதிரியை ஆய்வு செய்ய காவல் துறையினர் முடிவு செய்தனர். புனேவின் சாசூன் பொது மருத்துவமனையில் அவரின் ரத்த மாதிரிகளை மாற்றி, ஆதாரங்களை அழிக்க முயன்ற இரண்டு மருத்துவர்களை புனே நகர் காவல் துறையினர் கைது செய்தனர். சாசூன் மருத்துவமனையின் தடயவியல் துறைத் தலைவர் டாக்டர் அஜய் தவேர் மற்றும் டாக்டர் ஸ்ரீஹரி ஹர்னர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்