மாடு முட்டி நீதிமன்ற ஊழியர் இறந்த விவகாரம் - போலீசார் அதிரடி

x

நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜ் நேற்றைய தினம் வண்ணாரப்பேட்டை பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது சாலையில் சண்டையிட்டுக் கொண்டிருந்த மாடுகள் அவர் மீது பாய்ந்தன. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது பேருந்து ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள சாலைகளில் கேட்பாரற்ற நிலையில் சுற்றி தெரியும் மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து வருகின்றனர். சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு 40க்கும் மேற்பட்ட மாடுகள் இதுவரை பிடிக்கப்பட்டுள்ளன. மாடுகளின் உரிமையாளர்கள் யார் என கண்டறியப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்