ஏமாற்றத்தில் காட்டு யானையின் ஆக்ரோஷ செயல் - பரபரப்பு காட்சி

x

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் சுற்றித் திரிந்த ஒற்றைக் காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள பெட்ரோல் பங்கிற்குள் காட்டு யானை நுழைந்த நிலையில் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து சாலையோர தர்பூசணி பழக் கடையின் கூரையைப் பிய்த்து தர்பூசணி பழங்களை காட்டு யானை தேடியது. தர்பூசணி பழங்கள் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த காட்டு யானை, லாரியை வழிமறித்த நிலையில், லாரி ஒட்டுநர் தப்பித்து ஓடினார். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்