திடீரென கேட்ட அலறல் சத்தம்... 8 வயது மகளுக்கு தந்தை செய்த காரியம்

x

குடவாசல் அருகே செல்வகுமார் என்பவர், மனைவி உயிரிழந்த நிலையில் 8 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் செல்வகுமாரின் வீட்டில் சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர், செல்வகுமார் வெளியே சென்றபிறகு அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது செல்வகுமார் அவரது மகளுக்கு 6 இடங்களில் சூடு வைத்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், சைல்ட் ஹெல்ப்லைன் எண்ணிற்கு புகார் அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் அறிவுறுத்தலின்படி, சிறுமியிடம் விசாரணை நடத்திய சைல்ட் ஹெல்ப்லைன் அதிகாரிகள், சிறுமியை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்