நீரில் மூழ்கிய 5 வயது சிறுமி - கொள்ளிடத்தை நடுங்க வைத்த சம்பவம்

x

உறையூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் தனது 5 வயது மகள் சரோஜினி சன்மதியுடன் கொள்ளிடம் புதிய தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார். நேற்று மாலை குடும்பத்துடன் குளித்த குழந்தை நீரில் மூழ்கிய நிலையில் இன்று சடலம் மீட்கப்பட்டது. சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்தனர். காவல்துறை எச்சரிக்கையை கண்டுகொள்ளாத மக்கள், கொள்ளிடம் புதிய தடுப்பணையில் குளிப்பதாகவும், பாலத்தின் மீது இருந்து குதிப்பது, ஆழமான பகுதிக்கு செல்வது இது போன்ற நிகழ்வால் உயிர்சேதம் தொடர்வதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்