ஒற்றை ஆடியோவால் சிக்கிய பெண் காவலர் - பின்னணியில் ஷாக் - சென்னையில் அதிர்ச்சி

x

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்த திவ்யா, குடும்பத் தகராறு காரணமாக தனது கணவர் மீது பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் தொடர்பாக சி.எஸ்.ஆர். போட்டு வழக்கை விசாரிக்க, இன்ஸ்பெக்டர் இந்திராணி 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. ஆயிரம் ரூபாய் அனுப்புவதாக புகாரளித்த பெண் கூறியபோது, 2 ஆயிரம் ரூபாயை அனுப்ப வேண்டும் என இன்ஸ்பெக்டர் கறார் ஆக பேசியதும் ஆடியாவில் பதிவாகி இருந்தது. இந்நிலையில் லஞ்சம் கேட்டு சிக்கிய இன்ஸ்பெக்டர் இந்திராணியை ஆயுதப்படைக்கு மாற்றி ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுமிக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது தொடர்பான புகாரிலும் இந்திராணி சம்பந்தப்பட்டுள்ள நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்