சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில்.. பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி- 20 பேரால் வந்த பெரும் தலைவலி

x

சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட, சென்னை - புதுச்சேரி விரைவு ரயிலில், பெண் பயணிகளை தொந்தரவு செய்த 2 மருத்துவ மாணவர்கள் உட்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வார விடுமுறையை கொண்டாட மாணவர்கள் உட்பட 20 பேர் டிக்கெட் புக் செய்திருந்தனர். பயணத்தின் போது, சக பயணிகளை தொந்தரவு செய்யும் விதமாக செல்போனில் பாடல்களை ஒலிக்க விட்டு, நடனமாடியுள்ளனர். இதனை தொடர்ந்து, ரயில்வே போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், கேளிக்கையில் ஈடுபட்ட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து, செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்