80 கூலி குடும்பங்களை கதறவிட்ட தில்லாலங்கடி - வெளியான திடுக் பின்னணி

x

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதியியை சேர்ந்தவர் சுகுணா. கணவரின்றி தனது இரு மகன்களுடன் தனியே வசித்து வந்த இவர், ஏலச்சீட்டு பெயரில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 80க்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூல் செய்து, கோடிக்கணக்கிலான பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. சொன்னபடி பணத்தை திருப்பி கொடுக்காமல் சுகுணா இழுத்தடித்து வந்ததால், பணத்தை கேட்டு பகுதிமக்கள் வற்புறுத்தி வந்துள்ளனர். இதனிடையே, தனது மகன்களுடன் சேர்ந்து வீட்டை விற்று விட்டு சுகுணா திடீரென தலைமறைவானதால் அதிர்ச்சியடைந்த பகுதி மக்கள் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ள நிலையில், புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்