"கோசானம் என்ற வளையத்தில் தொங்க விட்டு அடிப்பார்கள்" - முன்னாள் மாணவர்களின் முஸ்தபா முஸ்தபா மொமெண்ட்

x

கோவையில் 1923 ல் தொடங்கப்பட்டு நூறாண்டுகள் கடந்த தொடக்கப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்கமித்து, புகைப்பட கண்காட்சியை கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

சூலூர் அருகம்பாளையத்தில் 1923 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு பள்ளி உள்ளது. ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறார்கள். இன்றுடன் நூற்றாண்டை நிறைவு செய்துள்ளதால், நூறாண்டு நினைவு வளைவு வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாணவர்கள் சங்கமித்து, நூற்றாண்டு கொடிகளை பிடித்து பேரணி சென்றனர்.

பின்னர் இந்த பள்ளியில் 1920 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை எடுக்கப்பட்ட முன்னாள் மாணவர்களின் புகைப்படங்கள், குழு புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த குழு புகைப்படத்தை பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் தங்களது போட்டோக்களை பார்த்து சக நண்பர்களுடன் கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்