தண்டனை முடிந்து வந்த கைதிக்கு காத்திருந்த அதிர்ச்சி - நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சி

x

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ள நிலையில், ஜெராக்ஸ் மற்றும் கம்மங்கூல் கடை வைத்து தொழில் செய்து வந்திருக்கிறார். மேலும், செல்வம் மீது கொலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இரண்டு முறை குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், சம்பவத்தன்று 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 9 பேர், செல்வத்தை வீடு புகுந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்