பழுதாகி நின்ற பஸ் - ஒரே ஒரு சிறுவன் செய்த படுலூட்டி - ரீல் டூ ரியல் சம்பவம்

x

மதுரை பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்ற

மாநகர பேருந்து, திடீரென பழுது ஏற்பட்டு சாலையின்

நடுவே நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பேருந்தில் இருந்த

பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் பேருந்தை சாலையின் ஓரத்திற்கு தள்ளி கொண்டு சென்று நிறுத்தினர். பின்னர், பேருந்தில் பயணித்த பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். மாநகரப்

பேருந்துகள் பெரும்பாலானவை பழுதாகி இருப்பதால் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்