தமிழை வளர்க்க தஞ்சை சர்பத் கடைக்காரர் எடுத்த முயற்சி.. ஒருநாள் நடந்த சம்பவத்தால் கிடைத்த ஐடியா

x

தஞ்சாவூரில் தமிழ் மீதான ஆர்வத்தை வளர்க்கும் வகையில் சர்பத் கடைக்காரர் ஒருவர் திருக்குறள் கூறும் மாணவர்களுக்கு இலவசமாக சர்பத் வழங்கி அசத்தி வருகிறார்... நாஞ்சிக்கோட்டை சாலை பாத்திமா நகரில் இயங்கி வரும் சர்பத் கடையின் உரிமையாளர்களான சீனிவாசன் மற்றும் அவரது சகோதரர் சிவாஜி இருவரும் திருக்குறள் மற்றும் தமிழ் வாசிப்புப் பழக்கத்தை மாணவர்களிடம் வளர்க்கும் விதமாக, 5 குறள்களுக்கு சர்பத்தையும், 10 குறள்களுக்கு பால் சர்பத்தையும், 20 குறள்களுக்கு மில்க் ஷேக்கையும் இலவசமாக தருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்