ஆஃபர் போட்ட ஜவுளி கடை..அடித்து நொறுக்கி அள்ளி சென்ற மக்கள்.. தஞ்சையில் பெரும் பரபரப்பு | Thanjavur

x

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஜவுளி வாங்க குவிந்தனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே, ஜவுளி நிறுவன ஊழியர்கள் நூறு, நூறு பேராக கடைக்குள் அனுமதித்தனர். 500 பேர் கடைக்குள் சென்றவுடன் ஸ்டாக் தீர்ந்து விட்டதாக ஜவுளிக்கடை ஊழியர்கள் அறிவித்தனர். இதனால் வெளியில் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள்

ஆத்திரம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நகரின் முக்கிய பகுதியான மணிக்கூண்டு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், கடையை முற்றுகையிட்டு கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்