விரல்கள் மீது 15 முறை ஏறி இறங்கிய கார்,ஜீப் - உலக சாதனை படைத்த டெல்டா மாணவி..

x

விரல்கள் மீது 15 முறை ஏறி இறங்கிய கார்,ஜீப் - உலக சாதனை படைத்த டெல்டா மாணவி..

தஞ்சை மாவட்டம் பட்டுக்கேட்டையை சேர்ந்த 12ம் வகுப்பு பள்ளி மாணவி 2 டன் எடையுள்ள கார், ஜீப் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை தொடர்ச்சியாக 15 முறை தனது

கை விரல்களில் ஏற்றி உலக சாதனை படைத்தார். பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜேந்திரன் - அன்பரசி தம்பதியரின் 16 வயது மகள் சுசிஷாலினி. கராத்தே பயின்று வரும் இவர், இந்த சாதனையை செய்து அசத்தியுள்ளார். கின்னஸ் சாதனை படைத்த மாணவிக்கு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலரும் சால்வை அணிவித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்