சோறு காலி என சொன்னதால் ஏறிய ஆத்திரம்... சரமாரி தாக்குதல்..சிகிச்சையிலும் ஓயாத தாக்குதல்

x

தஞ்சை அருகே உணவக ஊழியர்களை கண்டுமூடித்தனமாக தாக்கிய போதை ஆசாமிகளை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு பால கரையில் இயங்கிவரும் தனியார் உணவகத்திற்கு சுமன், ஜெகதீஷ் மற்றும் வீரா ஆகியோர் குடிபோதையில் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது அங்கு சாப்பாடு இல்லாததால் ஆத்திரம் அடைந்த அவர்கள், உணவக ஊழியர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி இருந்தது. தாக்குதலில் உணவக ஊழியர்கள் அருள் பாண்டியன், குணா மற்றும் குணாவின் தாய் ஜீவா ரத்தினம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்