பிரபல ரவுடியை வெட்டி கொலை செய்த 7 பேர்.. - தஞ்சையில் பயங்கரம்..

x

தஞ்சையில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அறிவழகனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திவாகருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை திவாகர் கும்பலால் அறிவழகன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திவாகர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இதில் தலைமறைவாக உள்ள பரத் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்து இருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்