ஸ்கூட்டியை அக்கு அக்காக பிரிக்க வைத்த நாகப்பாம்பு.. மிரளவிடும் காட்சி

x

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில், இருசக்கர வாகனத்தில் புகுந்த நாகப்பாம்பை, தீயணைப்புத் துறை வீரர்கள் லாவகமாக பிடித்தனர். நெட்டூர் சாலையை சேர்ந்த நபர், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனத்திற்குள் நாகப்பாம்பு புகுந்தது பார்த்து தீயணைப்புத்துறையினருக்கு தகவலளித்துள்ளார். விரைந்து வந்த வீரர்கள், இருசக்கரவாகனத்தில் பாகங்களை அகற்றி பாம்பை பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்