சந்தேகத்தில் புரோட்டா சால்னா கொடுத்து மனைவியை கொன்ற மாற்றுத்திறனாளி.. VAO முன் சரண்.. தென்காசியில் ஷாக்

x

தென்காசி மாவட்டம் தென்காசி சொர்ணபுரம் தெருவை சேர்ந்த மஸ்தான்-பாத்திமா தம்பதிக்கு திருமணமாக இரண்டு குழந்தைகள் உள்ளனர். மாற்றுத்திறனாளியான மஸ்தான் கூலி வேலை செய்து வந்தார். இதற்கிடையே பாத்திமாவுக்கு நடவடிக்கையில் சந்தேகமடைந்த மஸ்தான் அவரை அழைத்து கண்டித்துள்ளார். வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக எண்ணிய மஸ்தான், மனைவியை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி, புரோட்டா வாங்கி வந்த அவர் அதற்கான சால்னாவில் தூக்க மாத்திரையை கலந்து மனைவிக்கு கொடுத்துள்ளார். சாப்பிட்டு மயங்கிய மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர், மனைவியை கொன்றுவிட்டதாக அவரே கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சரணடைந்தார். தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்