விமரிசையாக நடைபெற்ற தேர் திருவிழா.. , தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம்

x

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பிரசித்தி பெற்ற ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி கோவில் ஆவணி தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இம்மாதம் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் சிகர நிகழ்வான பத்தாவது நாளில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஸ்ரீவைத்தியலிங்க சுவாமி தேரை ஆண்களும், ஸ்ரீயோகாம்பிகை அம்பாள் தேரை பெண்களும் பக்தி கோஷங்களுடன் வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு தரிசித்தனர் .


Next Story

மேலும் செய்திகள்