மனைவியை கடித்த பாம்பை கொன்று டவுசர் பையில் வைத்து ஹாஸ்பிடலுக்கு வந்த கணவன்

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஜமீன் இழந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் புல் அறுத்து கொண்டிருந்த போது அவரை பாம்பு கடித்துள்ளது.

மகேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக சென்ற அவரது கணவர் பாம்பை கொன்று விட்டு மனைவியை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மகேஸ்வரிக்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மனைவியை கடித்த பாம்பை கொன்று அதனை பொட்டலத்தில் மடித்து தனது டிரவுசர் பையில் வைத்து மகேஸ்வரியின் கணவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்