இரும்பு கம்பியால் மூதாட்டியை அடித்தே கொன்ற பெண் - அதிர்ச்சி காரணம்

x

தென்காசி மாவட்டம் சொக்கலிங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தவசி கண்ணு. திருமணம் ஆகாத இவர் தனியே வசித்து வருகிறார். சம்பவத்தன்று குடி தண்ணீர் பிடிக்கும் போது அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளைதுரைச்சி என்பவருடன் வாய்தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த வெள்ளை துரைச்சி இரும்பு கம்பியால் தவசி கண்ணுவை தாக்கியதால் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் தவசி கண்ணுவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்குச் சிகிச்சை பலனின்றி தவசி கண்ணு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் வெள்ளை துரைச்சியைத் தேடி வருகின்றனர்.முன்னதாக தவசி கண்ணுவின் உடல் பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது


Next Story

மேலும் செய்திகள்