காதல் கணவனுக்கு சவப்பெட்டியாக மாறிய ஆட்டோ... ஆசையாக அழைத்து மூச்சை பிடித்த அன்பு மனைவி

x

தென்காசி அருகே கணவரை கொன்றுவிட்டு ஆட்டோவில் வைத்து நாடகமாடிய மனைவி மற்றும் அவரது சகோதரரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசியை சேர்ந்த சின்னதுரை என்பவர், செங்கோட்டை புதூர் பகுதியைச் சேர்ந்த மாயா என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். சின்னத்துரை ராமேஸ்வரத்தில் தனியார் மர அறுவை ஆலைக்கு சென்ற நிலையில், மாயா புதூரில் தனி வீடு பார்த்து தங்கியுள்ளார். சில தினங்களுக்குமுன் மகளிர் குழுவில் கடன் வாங்குவதற்காக வரவழைத்தபோது கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கணவரை யாரோ அடித்து, வீட்டு வாசலில் போட்டுள்ளதாகக்கூறி, சின்னதுரையின் சகோதரர் வீட்டிற்கு கணவரின் சடலத்தை ஆட்டோவில் வைத்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் சந்தேகமடைந்ததால் செங்கோட்டைக்கு அரசு மருத்துவமனைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், சின்னதுரையை மாயா மற்றும் அவரது சகோதரர் மனோ சேர்ந்து கம்பியால் அடித்துக்கொன்றது தெரியவந்தது. மேலும் கொலையை மறைக்க, ஆட்டோவில் சுமார் 5 மணி நேரம் உடலை வைத்து பல பகுதிகளில் சுற்றிவந்து நாடகமாடியதும் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து மாயா மற்றும் மனோவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்