"ஏய் ஏய் ஹெல்மெட்ட போட்றா" டிராபிக் போலீசின் செம ஐடியா - பாத்தா நீங்களே ஏமாந்துருவீங்க

x

தெலங்கானா மாநிலத்தில், சாலை விபத்துகளைத் தவிர்க்க போக்குவரத்து போலீசார் புது உத்தியை கையாண்டுள்ளனர். தெலங்கானா மாநிலம் ராஜண்ணா ஸ்ரீசில்லா மாவட்ட போலீசார், 3-டி அனிமேஷன் முறையில், பிளைவுட்டில் தயாரிக்கப்பட்ட போக்குவரத்து போலீஸ் வாகனம், காவலர் ஆகியவற்றை, விபத்துகள் அதிகம் ஏற்படும் பகுதியில் வைத்துள்ளனர். சற்று தூரத்தில் இருந்து பார்க்கும்போது நிஜமாகவே காவலர் ஒருவர் வாகனத்துடன் நின்று கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்துகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் தவறுகளை சரி செய்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்