டிடிஎஃப் வழக்கு.. இளைஞர்களுக்கு சென்னை போலீஸ் கடும் எச்சரிக்கை

x

கடந்த 19-ஆம் தேதி, சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாகச பயணம் செய்யும்போது விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவருடைய ஜாமீன் மனு மூன்று முறை தள்ளுபடி செய்யப்பட்டு, நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், 4-ஆவது முறை அவர் ஜாமின் மனு தாக்கல் செய்தபோது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். டிடிஎஃப் வாசன் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்றும், அவருடைய விலை உயர்ந்த பைக்கை எரிக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பொதுமக்கள் தப்பி உள்ளதாகவும், துரதிஷ்டவசமாக வாசன் மாட்டிக்கொண்டதாகவும் கூறிய நீதிபதி, இது டி டி எஃப் வாசனுக்கு ஒரு பாடம் என்று கூறியிருந்தார். நீதிமன்றத்தின் இந்த கருத்தை மேற்கொள்காட்டி இளைஞர்களுக்கு சென்னை காவல்துறை முகநூர் பதிவு மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்