டாஸ்மாக்கில் திருடுபோன `ஒரேயொரு’ பீர் பாட்டில்.. பூத கண்ணாடி போட்டு திருடனை தேடும் காவல்துறை

x

கடலூரில், டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ஒரே ஒரு பீர் பாட்டில் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் முதுநகர் அருகே குடிகாட்டில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டு உடைந்து கிடந்தது கண்டு

மேற்பார்வையாளர் சுந்தர்ராஜன் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டன.

விற்பனையாளர் கணக்கு பார்த்தபோது, ஒரே ஒரு பீர் பாட்டில் மட்டும் திருடுபோனது தெரியவந்தது.

இது போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மேலும், பணப்பெட்டியில் இருந்த ஒன்று, இரண்டு, ஐந்து ரூபாய் நாணயங்கள், 100 ரூபாய் அளவுக்கு காணாமல் போயுள்ளன.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒரேயொரு பீர் பாட்டிலை திருடிச்சென்றவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்