வெளுத்து வாங்கும் கனமழை.. Heavy அலர்ட் கொடுத்த வானிலை மையம் .. குளிர் பிரதேசமாக மாறிய TN

x

நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. அகஸ்தியன்பள்ளி, தோப்புதுறை, தேத்தாகுடி, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம், நெய்விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. கோவிந்தபுரம், திருவிடைமருதூர், வண்ணக்குடி, ஆவணியாபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இரண்டு மணி நேரம் மிதமான மழை பெய்தது. தாராசுரம், கருப்பூர், பாணாதுறை பகுதிகளில் விட்டுவிட்டு பெய்த மழையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்