தமிழகத்தில் வெளுத்து வாங்கிய கனமழை - பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தின் காட்சிகள்

x

தமிழகத்தில் வெளுத்து வாங்கிய கனமழை - பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தின் காட்சிகள்

டானா புயல் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. இடி, மின்னலுடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.திருப்பூர் மாவட்டம் அவிநாசி, கைகாட்டிப்புதூர், பழங்கரை, வேலாயுதம்பாளையம், ஆட்டையம்பாளையம், பழங்கரை, பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் பர்கூர், காவேரிப்பட்டினம், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. விடாது பெய்த மழையால், பள்ளி முடித்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் மழையில் நிறைந்தவாறு சென்றனர்.நீலகிரி மாவட்டம் ஊட்டி, தலைக்குந்தா, பிங்கர்போஸ்ட், பாலாடா, முத்தோரை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரமாக வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.


Next Story

மேலும் செய்திகள்