"அரசு இடத்தில் தேவாலயம்.." விநாயகர் சிலையுடன் வந்த இந்து முன்னணியினர்.. பரபரப்பு காட்சி

x

புதுச்சேரியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் தேவாலயம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விநாயகர் சிலையுடன் தேவாலயம் அமைக்கும் இடத்தை நோக்கி சென்ற இந்து முன்னணியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு புனித ஆரோக்கிய மாதா சிலைகள் வைக்கப்பட்டு ஆண்டு தோறும் கொடியேற்றம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் தேர்பவனி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், அந்த இடத்தில் தற்காலிக தேவாலயம் அமைத்து மாதா சிலையை வைத்து வழிபட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து விநாயகர் சிலை வைக்க அங்கு சென்ற இந்து முன்னணியினரை, போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போதுதள்ளு முள்ளு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்